பெண்களுக்கு 33 விழுக்காடு தருவது
எப்போது... அதற்குதடையாக
இருப்பது என்ன? சமச்சீர்கல்வி என்பது வெறும் பேச்சளவில் மட்டும்தானா... அல்லது
நடைமுறைக்கு வருமா? சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் தேவை என்ன? நம் இனம்அழிக்கப்படும் போது நாம் மேற்கொள்ளவேண்டிய
நடவடிக்கைகள் என்ன? – இப்படி நாட்டின் நடப்புகளை அரசியல் நோக்கங்களும், சமூக
அக்கரையாளர்களும் விவாதித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி “சங்கப்பலகை”.
சமூகத்தில் அதிர்வை ஏற்படுத்தும் பிரச்சனைகளை,
சமூக நீதிக்கு பங்கம் விளைவிக்கும் பிரச்சனைகளை எடுத்து ஆழமாக அலசி... அதற்கு
எட்டப்பட வேண்டிய தீர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பது வரை தெளிவான ஆதாரங்களுடன்
பதிவு செய்யும் நிகழ்ச்சி “சங்கப்பலகை”.